Tuesday, August 18, 2009

ஒரு நிகழ்ச்சியும் அது தொடர்பான புகைப்படத்தையும் நீங்கள் பார்க்கிறீர்கள். இது இந்து நாளிதழில் வெளியானது. சென்னை அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரியில் நடை பெற்ற ஒரு புத்தகக்கண்காட்சியை நான் திறந்து வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அவைதீகவாதியான என்னை வைதீக முறைப்படி குத்துவிளக்கு ஏற்றுமாறு கல்லூரி நிர்வாகத்தினர் என்னிடம் பணித்தபோது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்ல. அவர்கள் மனம் புண்பட வேண்டாம் என்று நினைத்து அந்தக் குத்து விளக்கு வைபவத்தில் நான் பங்கு கொண்டேன். இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் அ.மார்க்ஸ் தன் சகாக்களிடம் என்ன மாதிரியான நக்கல் அடித்திருப்பார் என்பது எனக்குத்தெரியும். மார்க்ஸ் அவர்களே உங்களுக்கு புத்தரின் உபாய கௌசல்யா என்ற கொள்கை தெரியும் அல்லவா? இது அதோடு சேர்ந்ததுதான் சரிதானா?